டெல்லி பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பங்கேற்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப்படுகொலைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ரா (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் நடந்த இனப்படுகொலையில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் அமைதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். பேரணியின்போது ’பாரத் மாதா கி ஜெய்’ , ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷங்கள் எழுப்பினர்.

கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதே கலவரத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...