திருவனந்தபுரம் (28 ஜன 2022): மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் அனுமதி கோரி எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரின் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அரசு, சீருடையில் மதச் சின்னங்களைச் சேர்ப்பது பொருத்தமற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இது தவறான செய்தியைக் கொடுக்கும் மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட பிற பிரிவுகளில் இருந்து இதே போன்ற கோரிக்கைகள் எழும் எனவே இதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் என்.சி.சி மற்றும் சாரணர் மற்றும் வழிகாட்டி மாணவர்களின் மதப் பின்னணியுடன் தொடர்பில்லாத சீருடைகளும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அரசு மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாபுக்கு அனுமதி மறுத்துள்ளது
இதற்கிடையே அரசின் முடிவிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.