ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை – விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்!

புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் மற்றுமொரு போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் படுகொலை நடந்த லக்கிம்பூரிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி மீண்டும் போராட்டத்தைத் தொடங்க கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.

மேலும் ஜனவரி 31ம் தேதி விவசாயிகளின் துரோக தினமாக அனுசரிக்கப்படும். என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் அப்போது அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் கருதுகின்றனர். ஆதரவு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி கூட அமைக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் ஜனவரி 31ம் தேதி துரோக தினமாக கடைபிடிக்கப்படுகிறது என விவசாயிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...