துபாயிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம்!

மும்பை (25 டிச 2021): ஒமிக்ரான் பரவிவரும் சூழலில் துபாயில் இருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. துபாயில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பயணிக்கும் பயணிகள் ஏழு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, தனிநபர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சோதனை முடிவு எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். நேர்மறை (பாசிட்டிவ்) சோதனை முடிவு எனில், அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு மாற்றுவார்கள்.

நாட்டில் ஒமிக்ரான் பரவல் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு ஹரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகள் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளன. குஜராத் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் மற்றும் ஹரியானாவில், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...