வாக்கு எந்திரத்தில் பாஜகவுக்கே விழுகிறது – மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்!

Mamta-Banerjee
Share this News:

கொல்கத்தா (27 மார்ச் 2021): மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே விழுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2016 தேர்தலில், இந்த 30 தொகுதிகளில் 27ல் திரிணாமுல்ல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 27ஆம் தேதியும், இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்தில் பிற்பகல் 3 மணி வரை 70.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கிழக்கு மிட்னாபூர் தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் திரிணாமுல் கட்சிக்கு வாக்களித்தாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு வாக்களித்ததாகவே காட்டுவதாக புகார் எழுந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாங்கள் வாக்களித்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் காட்டுவதாக வாக்காளர்கள் புகார் கூறினர். அந்த வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்குச்சாவடி அதிகாரி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்த நிலையில் வாக்குப்பதிவில் ‘முரண்பாடு’ இருப்பதாக எம்.பி. டெரெக் ஓ பிரையன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்


Share this News:

Leave a Reply