முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

Share this News:

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் .

ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடிவந்த நிலையில், ராஜேஷ் வளைகுடாவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் ராஜேஷ் டிசம்பர் 15 அன்று வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தபோது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.

பின்பு ராஜேஷ் அட்டிங்கல் ஜூடிசியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜேஷுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், வெளிநாட்டில் 10 வருடங்களாக முஸ்லிம் போலவே நடித்து பணிபுரிந்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply