பில்கிஸ் பானு விவகாரத்தைப் பற்றி பேச மறுத்த ஆம் ஆத்மி தலைவர்!

Share this News:

அகமதாபாத் (20 அக் 2022): பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு தொடர்பான கேள்விகளை டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா தட்டிக் கழித்தார்.

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் போது சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க சிசோடியா மறுத்துவிட்டார். சமீப நாட்களில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சார நிகழ்ச்சிகளில் சிசோடியா பங்கேற்றார்.

அப்போது, தேசிய ஊடகமான ஏபிபியின் நிருபர், பில்கிஸ் பானு விவகாரம் குறித்து சிசோடியாவிடம் கருத்து கேட்டார். குஜராத்தில் நீங்கள் பில்கிஸ் பானு மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசவில்லை, மென்மையான இந்துத்துவத்தை ஊக்குவிக்கிறீர்கள் என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியது

இதற்கு பதிலளித்த சிசோடியா “கல்வி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சியில் எங்களது முக்கிய கவனம் உள்ளது. இதுவே எங்களின் இலக்கு.” என்றார். ஆனால் முஸ்லிம்கள் குறித்த எந்த கேள்விக்கும் சிசோடியா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மத்திய அரசின் அனுமதியுடன் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் அதைப் பற்றி பேசாமல் மற்ற விவகாரங்களில் கவனத்தைத் திருப்பினார் மனிஷ் சிசோடியா.

2002 குஜராத் இனப்படுகொலையின் போது கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து மூன்று வயது சிறுமி உட்பட 14 பேரைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது. பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply