இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்!

Share this News:

புதுடெல்லி (25 டிச 2021): இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றன.

நாட்டில் இதுவரை 415 ஓமிகான் வழக்குகள் பதிவாகியுள்ளன. 115 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிக ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு 108 பேருக்கு ஒமிக்ரான் பரவியுள்ளது.

79 வழக்குகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத்-43 மற்றும் தெலுங்கானா-38. நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

ஓமிக்ரான் பரவலால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாடு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம். முன்னதாக, நாட்டில் ஓமிக்ரான் பரவுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்தது.

இதற்கிடையில், நாட்டில் இன்று 7,189 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. 387 பேர் உயிரிழந்துள்ளனர். 77,516 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Share this News:

Leave a Reply