கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை!

புதுடெல்லி (06 டிச 2020): உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர்,கோவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து மற்றும் பஹ்ரைனில் உரிமங்களைப் பெற்ற பின்னர் இந்தியாவில் பயன்படுத்த உடனடி ஒப்புதல் கோரியுள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி, சோதனைகளில் 95 சதவிகித சாதகமான முடிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூ றியுள்ளது. பிரிட்டனும் பஹ்ரைனும் ஏற்கனவே ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனை அடுத்து மருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.

ஆனால் இதுவரை , ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் பரிசோதிக்கப்படவில்லை. தற்போது, ​​இந்தியாவில் ஐந்து தடுப்பூசிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்னவென்றால், ஃபைசருக்கு ஒப்புதல் அளித்தால் , தடுப்பூசி மைனஸ் 70 டிகிரியில் வைக்கப்பட வேண்டும். மற்றும் அதிக விலை. இறக்குமதி செலவுகளும் ஏற்படும்.

ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து இந்தியாவில் உருவாக்கப்படும் , பாரத் பயோடெக் தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஆகியவை பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது..

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...