கோழிக்கோடு (07 ஆக 2020): துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 191 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் இல்லை. அதேவேளை காயம் அடைந்தவர்கள் புலிக்கள் பி.எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.