பிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (30 மே 2020): பிரதமர் கேர் நிதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்ததற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு PM CARES ? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர், பிஎம் கேர் நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிஎம் கேர் நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், பி.எம்.கேர் நிதி அமைப்பு அல்ல என்றும், எனவே அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என்றும், எனினும் அதற்கான இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம் என்றும் கூறியுள்ளது.


Share this News: