புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தியின் மனிதாபிமானமிக்க செயல்!

Share this News:

லக்னோ (17 மே 2020): , காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தியின் ஏற்பாட்டின் பேரில், 500 பேருந்துள் மூலம் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்த லாரி, நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 பேர் பலியாகினர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல, 500 பேருந்துகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

இதேபோன்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களை, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயிரம் பேருந்துகளை இயக்கவுள்ளதாகவும், இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Share this News: