எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர்.

எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை செய்யப்பட வழக்கில் ரதீஷ், பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஷான் கொலையில் அவரை நன்கு அறிந்தவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் விசாணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஆதாரங்களின்படி, ரதீஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பிரசாத் என்பது தெரியவந்தது.

பிரசாத் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, கொலைக்கு ஆள் பிடித்து அவரை வழிநடத்தியவர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதானவர்களிடமிருந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் கைது விரைவில் நடைபெறும். இந்த கொலையில் பாஜக முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாஜக தலைவர் ஒருவரும் ஷான் கொலை செய்யப்பட்ட அடுத்த நாள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....