தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார்.

பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று இரவில், கிராமத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனை அடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தனது மகளைக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் கால்நடைத் தொழுவத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பின்னர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது

மேலும் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தங்கள் வீட்டை எரித்து விடுவோம் என்று குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...