மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Share this News:

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், “மது விற்பனையை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது. மேலும் மதுவை ஆன்லைனில் விற்பனை அல்லது டோர் டெலிவரி செய்வது குறித்து மாநிலங்கள் பரசீலிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.

ஒருவேளை உணவுக்கே கையேந்திய பலர் மதுக்கடைகளில் குவிந்திருப்பது வேதனை அளிக்கிறது.


Share this News: