வில்லன் நடிகரின் ஹீரோ சேவை – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

Share this News:

கொச்சி (30 மே 2020): பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

கேரளாவில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 167 பேர் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களை ஏர் ஆசியா தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு பேருதவி புரிந்துள்ளார் சோனு சூட்.

லாக்டவுன் தொடங்கிய காலங்களிலிருந்தே சோனு சூட் மும்பையிலிருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 167 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் 147 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனு சூட்டின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டை குவித்து வருகின்றன. சோனு சூட் தபாங், அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர்.


Share this News: