அறிவிக்கப்படாத அவசர நிலை – எஸ்டிபிஐ அறிக்கை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் என்று SDPI தெரிவித்துள்ளது.

இதுகுறித்து SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், சங்கச் சுதந்திரம் அரசால் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் சாசன விழுமியங்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் SDPI கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே நேரத்தில் SDPI கட்சியையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி என்பதால் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு நிலைப்பாட்டை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...