மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (27 ஆக 2020): மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிருஷ்ணன் பால் குஜார், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply