சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!

Share this News:

கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை.

இந்த சிசிடிவி வீடியோ வைரலானதை அடுத்து, மகாராஜ்பூர் ஸ்டேஷனின் கான்ஸ்டபிள் பிரஜேஷ் சிங் தான் திருடன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்பி அவரை சஸ்பெண்ட் செய்தார். திருட்டு நடந்த போது போலீஸ் கான்ஸ்டபிளுடன் லயிக் சிங் என்ற ஊர்க்காவலரும் உடனிருந்தார். அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

செல்போனை பறிகொடுத்த மகாராஜ்பூர் சத்மாராவைச் சேர்ந்த நிதின் சிங் என்பவர் பிரகேஷ் சிங் மற்றும் வீட்டுக் காவலர் லைக் சிங் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராஜ்பூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயாராக இல்லை. இதற்கிடையில், இந்த சம்பவத்தில் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏஎஸ்பி விஜேந்திர திவேதி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply