ஹெல்மெட் அணியாயததை கண்டித்த போலீஸ்காரருக்கு பளார் விட்ட பெண்!

Share this News:

மும்பை (24 அக் 2020): ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பிய போக்குவரத்து போலீஸ்காரரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

. மும்பை கல்பாதேவியில் உள்ள சூர்த்தி ஹோட்டல் அருகே போக்குவரத்து போலீஸ் கடமையில் இருந்தபோது சங்ரிகா திவாரி, 29, என்ற பெண் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அவருடன் இன்னொருவரும் இருந்துள்ளார். . இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதற்காக அந்த போலீஸ்காரர் அபராதம் விதித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சங்ரிகா போலீஸ்காரரின் சீருடையை பிடித்து இழுத்து  பலமுறை தாக்கியுள்ளார். உடன் அந்த பெண்ணும் அவருடன் வந்தவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share this News:

Leave a Reply