ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நொய்டா (18 மே 2020): ஜீ மீடியா சேனல் பணியாளர்கள் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த சேனல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலக அலவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான ஜீ மீடியாவையும் அது விட்டு வைக்கவில்லை.

இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சுதிர் சவுத்ரி தெரிவிக்கையில், ” எங்கள் ஊழியர்களில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை COVID-19 ஆல் பாதிக்கப்பட்டார். ஒரு பொறுப்பான அமைப்பாக, அந்த நபருடன் நேரடி அல்லது மறைமுகமாக தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும் நாங்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தினோம்.

அதன்படி தற்போது 28 ஜீ மீடியா ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து ஜீ மீடியா அலுவலகம், செய்தி படப்பிடிப்பு தளம் ஆகியவற்றை சீல் வைத்ததோடு, வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளோம்.” என்றார்.

மேலும் அரசின் உத்தரவி முறையாக பின்பற்றி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜீ மீடியாவில் 2500 ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...