சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மேல் விசாரனைக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வங்கி விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை தொலைபேசியில் தெரியாத நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும், அத்தகைய தொலைபேசி அழைப்புகள் வந்தால் அதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...