குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

Share this News:

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸுக்குக் கீழே பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்கள் ஆண்டின் மிகக் குளிரான நாட்களாக இருக்கும். என்று வானிலை ஆய்வாளர் அடில் அல் சாடூன் தெரிவித்தார்.

குவைத்தின் அஸ்ராக் சீசன் ஜனவரி 24 முதல் ஜனவரி 31 வரை நீடிக்கும். இரவு மற்றும் விடியற்காலையில் காற்றின் வெப்பநிலை பகலை விட பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும்.

அஸ்ராக் பருவத்தின் குளிர்ச்சிக்கு முக்கிய காரணம் காஸ்பியன் கடலில் வீசும் குளிர் காற்று வலுவடைவதே ஆகும். திறந்த பகுதிகள், பாலைவனங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையான குளிர்ச்சியை அனுபவிக்கும்.

குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் வானிலையால், தடிமனான பாதுகாப்பு ஆடைகளுடன் கூட மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிரைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் காற்றோட்டம் இல்லாத அறைகளில் சூட்டிற்காக கரியை எரிப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Share this News:

Leave a Reply