கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

Share this News:

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா தயாரிக்கும் இறந்தவர்களின் பட்டியலில் வெளிநாடுகளில் இறந்த கேரளா மாநிலத்தவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன், நோர்கா மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக யூசுப் அலி கூறினார்.

இந்நிலையில் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு நியமித்துள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம், கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply