18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டோஸ் எடுக்கும் தேதியை ஸ்விஹாட்டி மற்றும் தவக்கல்னா ஆப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு டேஸ் போட்டு ஆறு மாதங்கள் கழித்து முடித்தவர்கள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...