இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

Share this News:

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின.

அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால் ஃப்ளை துபாய் இந்தியவிலிருந்து வரும் பயணிகளை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளையும் ஏற்க ஃப்ளை துபாய் நிறுவனம் மறுத்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஃப்ளை துபாய் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply