புனித ரமலான் உம்ரா குறித்து சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவிப்பு!

ஜித்தா (06 மார்ச் 2023): புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு இதற்கென உள்ள அப்ளிகேஷனில்அனுமதி பெற்ற பின்னரே உம்ரா செய்ய முடியும் என சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிபந்தனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட NUSK செயலி மூலமாகவோ அல்லது தவகல்னா செயலி மூலமாகவோ உம்ரா அனுமதி பெறலாம். கோவிட் நோயால் பாதிக்கப்படாத எவரும் விண்ணப்பங்கள் மூலம் அனுமதி பெறலாம்.

வெளிநாட்டிலிருந்து உம்ரா விசாவில் வருபவர்களுக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான விசாவின் அதிகபட்ச காலம் 90 நாட்களாக இருக்கும் என்றும் அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...