சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப் பகுதியான ஜித்தா மற்றும் மக்கா பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...