சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட மத்திய மாகாணங்கள் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவுதியில் இம்முறை குளிர் வித்தியாசமாக உணரப்பட்டது. ரியாத்தில் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பல இடங்களில் குளிர் கடுமையாக இருந்தது. ஹைல், தபூக், மற்றும் குரியாத் ஆகிய இடங்களில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேவேளை பிப்ரவரியில் குளிர் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காற்று வீசுவதைப் பொருத்தே பருவநிலை மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...