உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

Share this News:

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது.

உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார்.

ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார்.

வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் அதே தினத்தில் ரசிகர்கள் முன்னிலையில் முதல் பயிற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் அன்று அல்தாய்க்கு எதிராக ஒரு போட்டி உள்ளது. இதில் ரொனால்டோ விளையாடுவாரா என்பது குரித்து தகவல் இல்லை. ரொனால்டோவின் அறிமுகம் பெரும்பாலும் 14 ஆம் தேதி அல்-ஷபாப் அணிக்கு எதிரான ரியாத் டெர்பியில் இருக்கும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply