உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது.

உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார்.

ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார்.

வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் அதே தினத்தில் ரசிகர்கள் முன்னிலையில் முதல் பயிற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் அன்று அல்தாய்க்கு எதிராக ஒரு போட்டி உள்ளது. இதில் ரொனால்டோ விளையாடுவாரா என்பது குரித்து தகவல் இல்லை. ரொனால்டோவின் அறிமுகம் பெரும்பாலும் 14 ஆம் தேதி அல்-ஷபாப் அணிக்கு எதிரான ரியாத் டெர்பியில் இருக்கும் என தெரிகிறது.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....