கத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்!

Share this News:

தோஹா (03 ஜூலை 2020): புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பனங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பவர் கடந்த 5ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார் . கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார்.

கொரோனா தொற்று காரணமாக அச்சாதரணமான சூழ்நிலை நிலவுவதால் அவரது உடலை தாயகம் கொண்டு செல்ல முடியாமல் கடந்த இரு மாதங்களாக செய்வதறியாமல் திகைத்த நிலையில் சென்ற வாரம் செல்வத்தின் குடும்பத்தினர் #SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இறந்த செல்வத்தின் உடலை கத்தாரில் அடக்கம் செய்ய தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து #SDPI கட்சியினர் கத்தார் இந்தியன் சோசியல் ஃபாரத்தை தொடர்பு கொண்டு இவ்விசயத்தில் உடனடியாக உதவிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சோசியல் ஃபாரம் துரிதமாக செயல்பட்டு கத்தார் உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு குறுகிய கால அளவில் நல்லடக்கம் செய்வதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது .

நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை சோசியல் ஃபாரம் நிர்வாகிகள் முன்னின்று செய்தனர்.


Share this News: