துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது.
4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடந்து வருகிறது.
இந்த உலக கண்காட்சியில்,இன்று முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தமிழ்நாடு அரங்கை இன்று ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு அவர் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது.