கேப்மாரி – சினிமா விமர்சனம் (ஆச்சர்யம்)

Share this News:

எஸ் ஏ சந்திர சேகர் இயக்கம் என்பதால் ஏதாவது சட்டத்தின் ஓட்டைகள் குறித்து சொல்லியிருப்பார் என்று போய் பார்த்தால் ஆச்சர்யம்.

படத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள்.

இருவரும் பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள்.பின்ஜெய் அந்த பானத்தை அருந்த ஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்கள். உடனேதிருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து காதலிக்கதொடங்குகிறார்கள்.அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகைஅதுல்யா.ஒருபக்கம்இவர் ஹீரோவை ஒரு தலைபட்சமாககாதலிக்கிறார்.

ஒருநாள் அதுல்யாவின் வீட்டில் ஜெய்பீர் பானம் அருந்தி அதீதபோதைக்கு ஆளாகிறார்.சிலநாட்களுக்கு பின் அதுல்யாகர்ப்பமான கோலத்தில் நிற்க வந்துநிற்க ஜெய் மற்றும் வைபவிஅதிர்ச்சியாகிறார்கள். காதல்விசயம் வைபவிக்கு தெரியஅவ்வளவுதான் ஜெய்க்குபிரச்சனைக்கு மேல் பிரச்சனை? பிரச்சனைவிவாகரத்து வரை செல்கிறது. உண்மையில்என்ன நடந்தது?ஜெய்,வைபவிஇருவரும் பிரிந்தார்களா?அதுல்யாஎன்ன ஆனார்,ஜெய்எப்படி சமாளித்தார் என்பதே இந்த கேப்மாரி.

ஜெய்பலரும் விரும்பும் ஒரு லவ்ஹீரோ. ஆனால்இப்படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாகமாறிவிட்டார்.ஐடிஊழியராக இருக்கும் அவருக்குபீர் என்றால் உலகத்தையே மறந்துபோய்விடும்.வழிபயணத்தில்சந்தித்த ஹீரோயின் அவரின் வாழ்க்கைத் துணையாகவே மாறிப்போகிறார். முதலிரவில்அவருக்கு ஒரு இக்கட்டானகண்டிசன்.இதற்காகஅந்தஒன்றைவாங்க அவர் வண்டி எடுத்துசுத்த கடைசியில் வேறொருபிரச்சனையில் சிக்க படம்பார்ப்பவர்களை மிகவும் சிரிக்கவைக்கிறது.

பலஇடங்களில் அவர் பேசும் வசனங்கள்இரட்டை அர்த்தம் கொண்டதாகஇருக்கிறது.படத்தில்ஹீரோ, ஹீரோயின்இருவருக்கும் மிக நெருக்கமானகாட்சிகள்,படுக்கையறைகாட்சிகள் என நீண்டு கொண்டேசெல்கிறது.

ஹீரோயின்வைபவி ஒரு அப்பாவி பெண் போல.பிரச்சனைகள்அனைத்தும் தெரிந்த பின் ஜெய்யைவிட்டுக்கொடுக்கமுடியாமல்திணறும் காட்சிகள் பெண்களின்மனநிலைக்கே உரியது.பலபடங்களில் நடித்துள்ள இவர்இப்படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டியுள்ளார்.நடிப்புஓகே. ஆனால்ஓவர் ரொமான்ஸ்க்குள் தள்ளப்பட்டபரிதாபம்.

பலமனங்களை கவர்ந்த நடிகை அதுல்யா இப்படத்தில் இதுவரை இல்லாத வேடத்தில் நடித்துள்ளார்.இவரா இப்படி என சிலருக்கு தோன்றலாம். இவரின் வசனங்களிலும் இரட்டை அர்த்தம் கலந்திருக்கும்.

படத்தில் காமெடிக்கு தேவதர்ஷினி,சத்யன்மற்றும் இசையமைப்பாளர் சித்தார்த்(நடிகராக) சிலர்இருக்கிறார்கள். பெண்களேஅந்தரங்க விஷயங்களை ஓப்பனாகபேசிக்கொள்கிறார்கள்.

இயக்குனர் சந்திரசேகர் பல வருடங்களுக்குபின் சினிமாவில் ஒரு படத்தைகொடுத்துள்ளார். அவருக்குஇது 70 வதுபடம். இந்தவயதில் இப்படி ஒரு படமா என்றகேள்வி பலருக்கும் வரலாம்.

திருமணவாழ்க்கையில் பாலியல் உறவும்ஒரு அங்கம் என காமசூத்ராவைதழுவி அழுத்தி சொல்கிறார் இயக்குனர்.கிளைமாக்ஸில் ஏதோ சில விஷயங்கள் கதையுடன் பொருந்தவில்லையோ என்ற கேள்வி? சித்தார்த்விபின் இசையமைப்பில் பாடல்கள் ஓகே ரகம் ஆனாலும் மனதில்ஒட்டாமல் போய்விடுகிறது.

பல வெற்றிப் படங்கள், அதுவும் சட்டத்தின் ஓட்டைகளை இலகுவாக கையாண்டு கதை சொன்னவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். படத்தை எடுத்தவர்களும் தலைப்புக்கு பொறுத்தமானவர்கள்.


Share this News:

Leave a Reply