நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமை – இம்ரான்கானுக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி பதில்!

Share this News:

புதுடெல்லி (05 ஜன 2020): இந்தியர்கள் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலை படட்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும், போலியாக இந்த வீடியோவை பதிவு செய்து இந்தியா மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த வீடியோவை இம்ரான்கான் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இந்த வீடியோ பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுத்தீன் உவைசி, “இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம். சொந்த நாட்டைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலைப்பட்டால் போதும். ஜின்னாவின் தவறான கொள்கையை நிராகரித்து விட்டதாகவும், இந்திய முஸ்லீம்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம். அப்படியே இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply