நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “”நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய கிரிக்கெட் மிகவும் அடிப்படை நிலையிலேயே உள்ளது. பேட்டிங் அல்லது பவுலிங் மட்டும் செய்து ஒப்பேற்றிவிடலாம். ஆனால், எங்கள் காலத்தில், நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. இன்று கிரிக்கெட் மாறிவிட்டது. சில நேரங்களில் ஒரு வீரர் நான்கு ஓவர்கள் வீசிய பிறகு சோர்வடைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மேலும் அவர்களை மூன்று அல்லது நான்குக்கு மேல் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். இப்படி இருந்தால் என்ன செய்வது?

எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் காலத்தில் கடைசியாக வந்து வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கும் 10 ஓவர்கள் வீசுவோம். அந்த மனநிலையை அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அறிவுறுத்தியது. இன்றைய தலைமுறையினர் நான்கு ஓவர்கள் வீசிவிட்டு சைலன்ட் ஆவதை பார்க்கும் போது, எங்களுக்கு அதி விசித்திரமாக உள்ளது” என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...