சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

மெல்போர்ன் (19 ஜன 2022): இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் சூப்பர்ஸ்டாரான சானியா மிர்சா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதன்கிழமை அவர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார். 2022 சீசன் தனது கடைசி சீசன் என்றும் உறுதிப்படுத்தினார்.

சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம்களை வென்று WTA இரட்டையர் தரவரிசையில் உச்சத்தை எட்டியுள்ளார். WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியரும் அவரே.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த சானியா தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஓய்வு பெறுவது இலகுவானது அல்ல என்றாலும், என் 3 வயது மகனுடன் அதிகம் விமானப்பயணம் செய்வதன் மூலம் அவரை கடினத்தில் ஆழ்த்துகிறேன்; அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்; மேலும் என் உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன்; இன்று என் முழங்கால் மிகவும் வலிக்கிறது; நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் எனக்கு வயதாகி வருவதும் ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...