டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

Share this News:

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 4 -வது போட்டியில், உலகின் 3 -வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி பாராலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் பவினா படேல் படைத்தார்.

பாவினா 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற கணக்கில் ஜாங் மியாவோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் யிங் சோவை பவினா எதிர்கொள்கிறார்.

முன்னதாக, இவர் செர்பியாவின் 11 வது, 11-6, 11-7 என்ற நேர் ஆட்டங்களில் உலகின் 5 வது நிலை வீரரான போரிஸ்லாவா பெரிக் ராங்கோவிச்சை தோற்கடித்தார்.

16 வது சுற்றில், பவினா, பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 12-10 13-11, 11-6 என்ற புள்ளிகள் கணக்கில் பராலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply