ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

எங்கே அமித்ஷா? -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அமித்ஷா எங்கே”என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலானது வகுப்பு கலவரமாக மாறி 40 உயிரை காவு வாங்கியபோதும் சரி.. அமித்ஷா அமைதி காத்தது சர்ச்சைக்குள்ளானது. டெல்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி…

மேலும்...

என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார். மேலும்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...

அமித் ஷாவே பதவி விலகு – நாடாளுமன்றத்தில் அமளி!

புதுடெல்லி (03 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் நேற்று…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

இது டெல்லி அல்ல கொல்கத்தா – மம்தா பானர்ஜி பொளேர்!

கொல்கத்தா (02 மார்ச் 2020):டெல்லியில் நடைபெற்றதைப் போல் இங்கும் ‘கோலி மாரோ’ என்று கூறிவிட்டு ஊர் சுற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் கோலி மாரோ என்று கோஷமிட்ட மூவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அதையடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “பாஜக பேரணியில் டெல்லியைப் போல் ‘கோலி மாரோ’ என்று…

மேலும்...

கோபேக் அமித் ஷா – கொல்கத்தாவை கதறவிட்ட எதிர் கட்சியினர்!

கொல்கத்தா (01 மார்ச் 2020): கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் சிஏஏ ஆதரவு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொகட்த்தா சென்றார். அப்போது கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை…

மேலும்...

பொய் சொல்லவும் ஒரு திறன் வேண்டும் – அமித் ஷாவை விளாசிய விசிக எம்பி ரவிகுமார்!

சென்னை (29 பிப் 2020): “குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பச்சை பொய்” என்று விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை…

மேலும்...

டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...