முஸ்லிம் முதியவர் படுகொலை – பஜக பிரமுகர் உட்பர 22 பேர் கைது!

லக்னோ (09 செப் 2022):உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் முஸ்லிம், முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று 55 வயதான முஸ்தகீமின் ஆடு ஒன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப்பின் வயலில் அலைந்ததை அடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது, அன்று மாலை, முஸ்தகீமின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்தகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

மேலும்...

சிகிச்சை இன்றி சிறையில் உயிருக்கு போராடும் அதிகுர் ரஹ்மானை விடுதலை செய்ய கோரிக்கை!

புதுடெல்லி (08 செப் 2022): பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் வாடும் அதிகுர் ரஹ்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திர பிரதேசம் ஹத்ராஸில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் மற்றும் சமூக ஆர்வலர் அதிகுர் ரஹ்மான் ஆகியோர் உபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதய…

மேலும்...

குறிவைக்கப்படும் மதரஸாக்கள் – அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

புதுடெல்லி (05 செப் 2022): மதரஸாக்கள் குறி வைக்கப்படுவது குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் மதரஸாக்களை கணக்கெடுப்பது ஏன்? என அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. AIMPLB இன் செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் இதுகுறித்து கூறும்போது, “உத்தரப்பிரதேசம் மற்றும் அசாமில் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன. அஸ்ஸாமில், சில மதரஸாக்களை இடித்துவிட்டு பொதுவான பள்ளிகளாக மாற்றி வருகின்றன. மதக் கல்வியைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிப்பதும்தான் பிரச்சினை என்றால்,…

மேலும்...

பாபர் மசூதிக்கு ரதயாத்திரைக்கு அனுமதித்த வழக்கு முடித்து வைப்பு!

புதுடெல்லி (30 ஆக 2022): பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு ரத்த யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அப்போதைய உபி முதல்வர் கல்யாண் சிங்குக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கல்யாண் சிங் மரணத்தை கரணம் காட்டி அதேபோல மனுதாரரின் மரணத்தையும் கரணம் கட்டி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச…

மேலும்...

சிறுமி வன்புணர்வு – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

நொய்டா (29 ஏப் 2022): உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வியாழன் அன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங் தள அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் ஒரு காவல்துறை அதிகாரி காயம் அடைந்தார். 17 வயது சிறுமியை 13 வயது சிறுவன் வன்புணர்வு செய்த வழக்கு தொடர்பாக வலதுசாரி அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் சிறுவனும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. வன்புணர்வு செய்த சிறுவன் இந்து என்பதாக கூறப்படுகிறது….

மேலும்...

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் உயர் ஜாதியினரால் அடித்துக் கொலை!

ஃபிரோசாபாத் (26 ஏப் 2022): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​உயர் சாதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நரேன் கூறுகையில், இந்த சம்பவ தொடர்பாக 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்”…

மேலும்...

லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

லக்னோ (21 ஏப் 2022): உத்திர பிரதசத்தில் லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மொராதாபாத்திலிருந்து தப்பிச் சென்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் தங்களது திருமணத்தை மொராதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்ய முயன்றபோது இந்து யுவ வாஹினி அமைப்பினர், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக இருவரையும் இந்து யுவ வாஹினி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முஸ்லீம் இளைஞர் மீது…

மேலும்...

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...

ராமநவமி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களுக்கிடையே முஸ்லிம்கள் செய்த அந்த நல்ல காரியம்!

லக்னோ (12 ஏப் 2022): உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்கள் இடப்பட்ட போதிலும், கோசமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் பழச்சாறு பரிமாறியுள்ளனர். வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, அதன் ஒரு பகுதியாக, வாள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டுள்ளனர். ஊர்வலத்தின் பின்னணியில் உரத்த குரலில் கேட்கப்பட்ட பாடல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதாகவும்,…

மேலும்...

12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால்…

மேலும்...