சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...

விவசாயி எடப்பாடி டெல்லியில் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா? – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (21 மார்ச் 2021): தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்திரமேரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தனது…

மேலும்...

அவர் விவசாயி கிடையாது விஷ வாயு – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

தஞ்சாவூர் (19 மார்ஷ் 2021): முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி அவர் விவசாயி கிடையாது விஷ வாயு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறும் முதல்வர் பழனிசாமியின் நாக்கு அழுகிபோகும். காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து 50 ஆண்டுகள் காப்பாற்றியவர் கருணாநிதி….

மேலும்...

பிரதமருடன் ஆலோசனை – முதல்வர் எடப்பாடி புறக்கணிப்பு!

சென்னை (17 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கிறார். இந்தநிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன அதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக்…

மேலும்...

முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். எனினும், தொகுதியில்…

மேலும்...

சசிகலாவுடன் இணையும் முக்கிய அரசியல் பிரபலங்கள் – கலக்கத்தில் எடப்பாடி!

சென்னை (24 பிப் 2021): வி.கே சசிகலாவை முக்கிய அரசியல் பிரபலங்கள் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்தார். அதேபோல், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும், கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சூடுப்பிடித்துள்ள நிலையில், சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கடையல்லூர் (19 பிப் 2021): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பேசும்போது தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்ததியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும்…

மேலும்...

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (05 பிப் 2021):கூட்டுறவு வங்கிகளில் 16,43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது….

மேலும்...

சசிகலா பின்னால் 50 எம்எல்ஏக்கள் – பீதியில் எடப்பாடி தரப்பு!

சென்னை (04 பிப் 2021): சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்து வருகிறது. பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வருகைதரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் ஆறு அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதப் போவதாக தினகரன் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாய் வெள்ளி வாள் பரிசளிக்கஉள்ளதாகவும்…

மேலும்...

சசிகலா வரும் காரில் அதிமுக கொடி – அதிர்ச்சியில் எடப்பாடி!

சென்னை (31 ஜன 2021): பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை…

மேலும்...