மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி: முதல்வர் உத்தரவு!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்தும், கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவ பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்….

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு…

மேலும்...

கட்சி தலைமை மீது கடுங்கோபத்தில் வைத்தியலிங்கம் – முக்கிய முடிவெடுக்கவுள்ளதாக தகவல்!

சென்னை (08 ஜூன் 2020): அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகவும் அதில் கட்சி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு முக்கிய பதவி அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு கட்சிப் பதவிகளில் சிலரை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. கட்சியில் சில மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட உள்ளார்களாம். விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு…

மேலும்...

சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை (31 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்….

மேலும்...

வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை!

சென்னை (28 மே 2020): அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தொகுதிகளில் அதிக துடிப்புடன் உள்ளவர்களை கவனத்தில் கொண்டே பதவிகள் வழங்கப்படும்…

மேலும்...

அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்!

சென்னை (24 மே 2020): அதிமுகவில் முதல்வர் எடப்பாடியின் நாடார் எதிர்ப்பு கொள்கை நாடார் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து கடந்த மாதம் பறிக்கப்பட்ட விருதுநகர் மா.செ. பதவி, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாக பதவிகள் ஆகியவைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு…

மேலும்...

சென்னையை தவிர சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 மே 2020): சென்னை பெருநகரம் தவிர, தமிழகம் முழுவதும் நா‌ளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், நா‌ளை முதல் கா‌லை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும்…

மேலும்...

கொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (22 மே 2020): விமான சேவையை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு…

மேலும்...