பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

சென்னை (18 ஜன 2020): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு,…

மேலும்...

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் நாம் தமிழரைவிட மோசமாக இருக்கும்: சீமான்!

அருப்புக்கோட்டை (18 ஜன 2020): காங்கிரஸ் திராவிட கட்சிகளை விட்டுப் பிரிந்து போட்டியிட்டால் நாம் தமிழரை விட மோசமான வாக்குகளை பெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர். ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை சீமான் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் குறித்து கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

சென்னை (17 ஜன 2020) திமுக காங்கிரஸ் இடையேயான விரிசல் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிரிவு ஏற்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன் என்றாா். அதை தொடர்ந்து வேறெந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

மேலும்...

மன்னிப்பு அல்லது பதவி நீக்கம் – அடம்பிடிக்கும் திமுக!

சென்னை (17 ஜன 2020): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கோரியுள்ளதாம். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை…

மேலும்...

ஸ்டாலின் முதல்வராக முடியாது – பகீர் கிளப்பும் காங்கிரஸ் எம்பி!

சென்னை (17 ஜன 2020): திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவிலேயே ஆட்கள் உள்ளனர். என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடப பங்கீட்டில் எற்பட்ட கசப்பின் காரணமாக, ‘கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்படுவதாக’ மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன…

மேலும்...

புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!

சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம்…

மேலும்...

தமிழக காங்கிரஸுக்கு சோனியா காந்தி எச்சரிக்கை – பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி!

சென்னை (14 ஜன 2020): தமிழக காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் சோனியா காந்தி எரிச்சல் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர். இவ்விவகாரம் டெல்லியில் பெருமளவில் பிரதிபலித்தது. இதனாலேயே குடியுரிமை சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…

மேலும்...

திமுக காங்கிரஸ் இடையே விரிசல் – டெல்லியில் பிரதிபலிப்பு!

சென்னை (14 ஜன 2020): திமுக மீது குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அப்செட்டாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்தது. இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ்…

மேலும்...

யார் என்ன முயற்சித்தாலும் ராமர் கோவில் கட்டியே தீருவோம் – அமித் ஷா திட்டவட்டம்!

புதுடெல்லி (12 ஜன 2020): காங்கிரஸ் என்ன முயற்சித்தாலும் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “காங்கிரஸ் மக்களே, கேளுங்கள் … உங்களால் முடிந்தவரை (CAA) நீங்கள் எதிர்கலாம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு அகதிக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

மேலும்...