இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை – உ.பி தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அதிரடி!

லக்னோ (09 பிப் 2022): உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி, 20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...

கட்சி மாறமாட்டோம் – வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் தலைமை!

பனாஜி (23 ஜன 2022): கோவா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கட்சி மாறமாட்டோம் என்று சத்தியம் வாங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை. கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். இந்நிலையில், அடுத்த…

மேலும்...

பாஜகவிலிருந்து நீககப்பட்ட தலைவரை இணைப்பதால் காங்கிரஸில் பிளவு!

உத்தரகாண்ட் (18 ஜன 2022): உத்தரகாண்ட் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத், பா.ஜ.வால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவுள்ளார். இதனால் உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரசிலிருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஹரிஷ் ராவத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸின் மத்திய, மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர்…

மேலும்...

கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!

ஜார்கண்ட் (15 ஜன 2022):  தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜமதரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி…

மேலும்...

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...

பாஜகவுக்கு எதிரான அலை – காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணிக்கு வாய்ப்பு!

கோவா (13 ஜன 2022): கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை தோன்றியுள்ளது. கோவாவில் பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஊழல் என பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. ஆட்சிக்கு எதிரான கருத்து சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

அரசியலை விட்டே விலகுவேன் – சித்து உறுதி!

புதுடெல்லி (03 ஜன ஞ2022): பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் சித்து கூறினார். பக்வாரா எம்எல்ஏ பல்விந்தர் சிங் தலிவால் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய சித்து “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்காவிட்டால் அரசியலை விட்டு…

மேலும்...

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார்…

மேலும்...