Jacinda Ardern

நியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு!

ஆக்லாந்து  (11ஆக 2020):உலகளவில் இதுவரை 2,02,80,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,39,761 பேர் உயிரிழந்துள்ளனர். சரிவில்லா பொருளாதாரம் மிக நேர்தியும் வலுவும் மிக்கதொரு சுகாதார கட்டமைப்பு, நேர்மையான ஆட்சிமுறை உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. எனினும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகக் காட்டப்படும் நியூசிலாந்து நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் இருந்து நியூசிலாந்து வருவோர் ஒவ்வொருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகின்றனர். அதனால்…

மேலும்...
Modi-Shivsena

மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை (09 ஆக 2020):உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய கடுமையான பாதிப்புக்களினால், பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இந்நிலை மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் பலரும் தமது வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையைக்கூட நடத்த முடியாத அளவுக்கு ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்பட்டு வரும் நிலைமைகளும் உருவாகி வருகின்றன. வைரஸ்…

மேலும்...
Yediyurappa

கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

பெங்களூரு (ஆகஸ்ட் 02,2020): கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தனது ட்விட்டர் பகுதியில் அவர் கூறியுள்ளார்.தென்னிந்திய மாநிலங்களில் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து…

மேலும்...
RSS

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?

போபால் (25 ஜூலை 2020):தில்லியில் உள்ள நிஜாமுத்தின் மர்கஸ் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த விஷயத்தை பாஜக ஊதி பெரிதாக்கியது. பாஜக வைச் சேர்ந்த பாப்தியா என்பவர் தப்லீக் ஜமாஅத்தினரை ‘அறிவற்ற பன்றிகள்’ என்ற தகாத வார்த்தைகள் மூலம் கேலிப்படுத்தினார். தற்போது மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஜியா உல் ஹக் என்ற மாணவர் பாப்தியா பயன்படுத்திய அதே ‘பன்றிகள்’ என்ற…

மேலும்...

கொரோனா பாதித்த சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!மற்றொரு கொரோனா நோயாளி வெறிச்செயல்!

தில்லி (24 ஜூலை 2020): தில்லியிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 20 கால்பந்து மைதானங்களின் அளவை ஒத்த, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் ஒன்று தெற்கு தில்லி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10,000 பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தற்போது…

மேலும்...

பிளாஸ்மா தானத்துக்கான தகுதி பரிசோதனை முகாம்-முதன் முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை (24/07/2020):தமிழகத்தில் கொரோனா கோவிட்-19 நோய் தொற்றின் காராணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நோய் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மக்களை கொண்டு பெறப்படும் பிளாஸ்மா தானத்தின் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா பிரித்தறியும் எந்திரம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் …

மேலும்...
Plasma Donation

பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றிய ஹைதராபாத் மோசடிப் பேர்வழி கைது!

ஹைதராபாத் (22 ஜூலை,2020): வஞ்சகப் புத்தி கொண்டோருக்கு, சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எப்படிப்பட்டதாக இருப்பினும் கவலை இல்லை. கொரோனா நெருக்கடியால் முழு உலகமும் குறிப்பாக நமது நாடும் தத்தளித்து கடும் நெருக்கடியில் இருக்க, இந்த சூழலிலும் ஜெகஜ்ஜால கில்லாடி ஒருவன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மா அணுக்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி மூலம் பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றியிருக்கின்றான். ஹைதராபாத்தில் வசிக்கும் சந்தீப் ரெட்டி என்பவன் 200-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி…

மேலும்...
Roorki/IIT Violence/Nigeria

மாணவர் மீது பயங்கர தாக்குதல்! ஐ.ஐ.டி.இயக்குநர் கைது!

உத்தர்கண்ட் (18 ஜூலை,2020): உத்தர்கண்ட் மாநிலம், ரூர்கீ ஐ.ஐ.டி.யில் பயின்று வந்த நைஜீரியா மற்றும் கானா நாட்டு இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் மீதும் அவருடைய சக மாணவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஐ.ஐ.டி. இயக்குநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா நெருக்கடியால் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மாணவர் அதனையும் மீறி வெளிச் சென்றதால் தனியார் பாதுகாப்பு ஏஜென்சியினர் உதவியுடன் அவர்கள் மீது தாக்குதல்…

மேலும்...
Qatar tops In Corona Cure 1

கொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை!

கத்தார் (18 ஜூலை,2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிகளவு கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த நாடு கத்தார் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 50,000 க்கும் அதிகமான…

மேலும்...
Aishwarya-Aaradhya

ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (17 ஜூலை,2020): முன்னாள் உலக அழகியும், நடிகர் அமிதாப்பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, அவருடைய கணவருக்கும், மாமனாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யா ராயும் அவரது மகளான ஆராத்யா பச்சனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நடிகர் அமிதாப் பச்சன்…

மேலும்...