கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கண்டிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): கொரானா நோய் தொற்றோடு வாழப் பழகச் சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழித்து வரும் வேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின் உடல்நலத்திலும், பாதுகாப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் அளித்து மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும் என கமல்ஹாசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தலைவரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, தமிழகத்திலேயே முன்னோடியாக மக்கள் அதிகம் வருகை…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

சென்னை (03 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதல் ஆசிரியர்கள் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்…

மேலும்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவ வீரர்களுக்கு முதல்கட்ட சோதனை!

மாஸ்கோ (03 ஜூன் 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட சோதனை முறையாக ராணுவ வீரர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட…

மேலும்...

பைக்கில் இருவர் பயணித்தால் அபராதம் – எச்சரிக்கை!

சென்னை (03 ஜூன் 2020): கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்…

மேலும்...

முஸ்லிம்கள் மீது விஷக்கருத்தை பரப்பிய – மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானியின் உரிமைத்தை ரத்து செய்ய கோரிக்கை!

கான்பூர் (02 ஜூன் 2020): முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் அவர்கள்தான் என்றும் விஷக்கருத்தை பரப்பிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானியின் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள்…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...

ஒரே நாளில் 103 பேர் பலி – கொரோனாவால் திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

மும்பை (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகராஷ்டிரா. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா – பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு…

மேலும்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு!

சென்னை (02 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஜூன் 2 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன….

மேலும்...

இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவின் கடன் தரத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூடிஸ் நிறுவனம். மீண்டும் குறைத்துள்ளதால் இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலகின் முன்னணி பொருளாதார தரநிர்ணய நிறுவனமான மூடிஸ், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சூழலை பொறுத்து, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடன் பெறும் தரம், தொழில் வளர்ச்சி, உள்ளிட்டவற்றை பட்டியலிடும். அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை கருத்தில் கொண்டு, நமது சர்வதேச…

மேலும்...