முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

120 பெண்களின் ஆபாச வீடியோ – சாமியார் கைது!

புதுடெல்லி (09 ஜன 2023): அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, அவரின் குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரெயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். ஜிலேபி பாபா ஒரு பெண்ணை…

மேலும்...

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது!

ஜெய்ப்பூர்(30 டிச 2022): – ராஜஸ்தானில் 17 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சர்ஜுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆசிரமங்களின் தலைவரான சர்ஜுதாஸ், ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமியை சர்ஜுதாஸ் துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக சிறுமியின் தாய் மீது ஆசிட் வீச்சு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்திற்கு…

மேலும்...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடம் – சாமியார் தற்கொலை!

பெங்களூரு (05 செப் 2022): கர்நாடகாவில் சித்ரதுர்கா முருகா மடத் துறவி சம்பந்தப்பட்ட பாலியல் ஆடியோ ஒன்று வைரலான நிலையில் குரு மடிவாலேஸ்வரா மடத்தின் பூடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமிகள் அவரது ரூமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்ரதுர்கா மடத்தில் பெண்களும், சிறுமிகளும் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என்பது குறித்து இரு பெண்களுக்கு இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவாதத்தில் பசவ சித்தலிங்க சுவாமிஜியின் பெயரை இரண்டு…

மேலும்...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – சாமியார் சிறையிலடைப்பு!

பெங்களூரு (02 செப் 2022): சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான லிங்காயத் சாமியார் பரசுராமன் சிவமூர்த்தியை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மடத்தில் வைத்து சிவமூர்த்தியை…

மேலும்...

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...

பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாருக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் போராட்டம்!

லக்னோ (11 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனிதாசுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் கைராபாத் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய…

மேலும்...

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல் – வீடியோ

லக்னோ (08 ஏப் 2022): உத்திர பிரதேசத்தில் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நவராத்திரி விழாவையொட்டி உத்திர பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது….

மேலும்...

கொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்!

கட்டாக் (28 மே 2020): கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி கோவிலில் வைத்து ஒருவரின் தலையை வெட்டி கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார் கோவில் பூசாரி ஒருவர். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே புதன்கிழமை இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றை கண்டெடுத்தனர் போலீசார். உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையானவரின் பெயர் சரோஜ் குமார் பிரதான் என்ற 52 வயது உள்ளுர் நபர் என்பது…

மேலும்...

விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது – ஆசிரமத்திற்கு சீல்!

லக்னோ (26 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு….

மேலும்...