தமிழகத்தை உத்திர பிரதேசமாக மாற்ற அதிமுக திட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

சென்னை (15 பிப் 2020): அமைதி பூங்காவான தமிழகத்தை உத்திர பிரதேசம் போன்று கலவர பூமியாக மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை…

மேலும்...

ட்ரெண்டிங்கில் சென்னை ஷஹீன்பாக் – வீதிக்கு வாங்க ரஜினி!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதலை அடுத்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னை ஷஹீன் பாக், வீதிக்கு வாங்க ரஜினி முன்னணியில் உள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது….

மேலும்...