ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி தேர்தல் பிரச்சாரம்!

நாகை (27 மார்ச் 2021): திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிமுன் அன்சாரி தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சிதம்பரம், காட்டு மன்னார்குடி, பன்ருட்டி ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார். நாளை (28-ந் தேதி) மற்றும்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு!

சென்னை (22 அக் 2020) எடப்பாடி தாயார் மரணித்ததையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா இரங்கலை தெரிவித்துக்கொண்டார்,. இச்சந்தித்தின்போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலளார் முனைவர் ஜெ. ஹாஜா கனி. தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணஙகுடி ஆர் எம் அனிபா ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும்...

திருச்சி மசூதி இடிப்பிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (13 அக் 2020): திருச்சி திருச்சி திருவானைகோவில் மசூதி இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைகோவிலில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்றதடை ஆணைகளைப் பெற்றிருந்த…

மேலும்...

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஜூலை 2020): “ஈரானில் சிக்கியுள்ள 44 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாட்டிலிருந்து சமுத்திர சேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாA என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

மேலும்...

அரசு அதிகாரிகளின் மெத்தனம் – வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பயணி பரிதாப மரணம்!

சென்னை (15 ஜூன் 2020):அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம்…

மேலும்...

எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது. தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக்…

மேலும்...

தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப ரெயில் கட்டணம் செலுத்திய எம்பி ரவீந்திரநாத்துக்கு நன்றி: ஜவாஹிருல்லா!

சென்னை (18 மே 2020): டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப உதவிய எம்பி ரவீந்திரராத் உள்ளிட்ட அனைவருக்கும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் முழு முடக்கத்தில் பயணிக்க இயலாத நிலையில் இருந்த தமிழக தப்லீக் சகோதரர்களும் சகோதரிகளும் தமிழகம் திரும்பினர். நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் தாம்பரம் ரயில்…

மேலும்...

சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால்…

மேலும்...

தமிழக அரசின் உத்தரவு பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும் – ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்கள் உணவு அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏழை கூலித் தொழிலாளிகளின் பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும்,” என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல்…

மேலும்...