ஒருவர் ஒரு காருக்கு மேல் வாங்கத் தடை!

குவைத் (23 ஆக 2021): குவைத்தில் வெளிநாட்டினர் ஒரு காருக்கு மேல் வாங்க தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவர் பல வாகனங்களை வாங்குவதை கட்டுப்படுத்தும் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்துத் துறையால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது. வணிக உரிமம் இல்லாமல் வாகனங்களை வாங்குவது, விற்பது, வாடகைக்கு விடுவது அல்லது குத்தகைக்கு விடுவதை கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கபப்டுள்ளது….

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி(20/01/2021): விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய மசோதாக்களை முழுவதுமாக கைவிடக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், விவசாய மசோதாக்களுக்குத் தடை கோரி திமுக…

மேலும்...

வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. டெல்லியினுள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க, டெல்லியின் நுழைவாயில் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் அசராமல் விவசாயிகள் கடுமையான குளிரிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வந்தனர். தாங்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவை தான் என்ற…

மேலும்...

டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு!

புதுடெல்லி (27 நவ 2020): கோவிட் சூழல் காரணமான சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சேவைகள் தொடரும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே சிக்கித் தவிக்கும்வர்களை திருப்பி அழைப்பதற்கான வந்தே பாரத் திட்டம் இதற்கு பொருந்தாது. குளிர்காலத்தை அடுத்து இரண்டாவது அலை…

மேலும்...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி அமைச்சர்…

மேலும்...

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

மதுரை (02 நவ 2020): ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்கள் தடை செய்யக்கோரி அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம் ஏராளமான அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்தார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் உள்ளிட்டவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை மற்றும் பணம் இழப்பது தொடர்ந்து…

மேலும்...

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை!

இஸ்லாமாபாத் (10 அக் 2020): டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசும் தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ‘டிக் டாக்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. அந்த வகையில், டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது. சமூகத்தில் பல்வேறு தரப்பினர்…

மேலும்...
PUB G

PUBG-க்கு தடை போட்டது நடுவண் அரசு..!

தில்லி (02செப். 2020):சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், லுடோ வேர்ல்ட், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன. இந்தியாவில்…

மேலும்...