தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் அதிர்ச்சி

கோவை (12 அக் 2021): தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு வார்டின் இடை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 1 வாக்குகள் மட்டுமே கிடைத்து படு தோல்வி அடைந்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றுள்ளன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

மேலும்...

அனைவரையும் சிலிர்க்க வைத்த மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வைத்த கோரிக்கை அனவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு பல காலமாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல இலவச திட்டங்களை வகுத்து செயல்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர்…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின்…

மேலும்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி…

மேலும்...